தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இக்கண்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் 24.02.2017 மற்றும் 25.02.2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. புகைப்படக்கண்காட்சியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் பார்வையிட்டனர். 

மேலும், இந்தப்புகைப்படக் கண்காட்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், நாட்டுக்கு உழைத்த தலைவர்களுடன் உள்ள புகைப்படங்களும் மற்றும் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா குறித்த புகைப்படங்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுளளன. இக்கண்காட்சியினை பொது மக்கள் பார்த்து அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் பயன்பெரும் வகையில் உள்ளது.

இக்கண்காட்சி பணியினை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார்  ஆகியோர் மேற்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...