பல்லடம் அருகே குப்பைகள் கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்து மக்கள் சாலைமறியல்!

பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் அருகேயுள்ள சாய் குரு கார்டன் பகுதியில் குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டரை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வந்த ஊராட்சி செயலாளரையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே சட்டவிரோதமாக குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு இடையில் அமைந்துள்ளது சாய் குரு கார்டன். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.



கரைப்புதூர் மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் இருந்து கோழி கழிவுகள், ஊராட்சி குப்பைகள் அனைத்தையும் சாய் குரு கார்டனில் உள்ள ஓடையில் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து, அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை குப்பைகள் கொட்டுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நீரோடையில் குப்பை கொட்டி வைத்துள்ளதால் அந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும், மழைக்காலங்களில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று கரைப்புதூர் ஊராட்சியில் இருந்து குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டர் ஒன்றை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



அப்போது, பேச்சை வார்த்தைக்கு வந்த ஊராட்சி செயலாளரை பொதுமக்கள் சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை என்றும், விரைவில் குப்பை கிடங்கு அமைத்து குப்பைகளை சுத்திகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி செயலாளர் மற்றும் காவல் துறையினர் உறுதி அளித்த நிலையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...