சூலூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு!

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி தாசில்தார் அலுவலகத்தில், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பொது பாதையை தனிநபர் இருவர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு வீரங்காடு பகுதியை சுற்றிலும் சொந்தமாக தோட்டம் உள்ளது. அப்பகுதியில் மாரியப்பன் உள்பட 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாரியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனை கண்டித்து, சூலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்தை நாடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...