பல்லடம் காவல் நிலையம் எதிரே நிறுத்தப்பட்ட பைக் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள கடையில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம ஆசாமி திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருடிச்சென்ற நபரில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையத்தில் வசித்து வருபவர் ஞான பிரகாஷ். இவர் சின்னிய கவுண்டம்பாளையத்தில் சொந்தமாக மின்சாதன கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடையில் பணிபுரியும் ராம்கி என்பவர் இன்று மாலை ஞானபிரகாஷின் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மற்றொரு மின்சாதன கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.



ராம்கி கடையில் பொருட்களை வாங்கி முடித்ததும் இருசக்கர வாகனம் நிறுத்திய இடத்திற்கு வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஒருவர், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இரண்டு முறை இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையத்தின் எதிரில் கூட வாகனத்தை நிறுத்த பாதுகாப்பு இல்லாத சூழல் பல்லடத்தில் நிலவுவதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...