தாராபுரம் நகராட்சியில் சிறப்பு துப்புரவு பணி - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்!

தாராபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ‘என் குப்பை என் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணி மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த "என் குப்பை என் பொறுப்பு" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி மற்றும் நகர் மன்றம் இணைந்து “என் குப்பை என் பொறுப்பு” என்ற திட்டம் குறித்து நகர பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாராபுரம் நகராட்சி என்.சி.பி ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையேற்று இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் 25க்கும் மேற்பட்டோரும், நகர் மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் ஆகியோரும் ஒரே இடத்தில் கூடி நகராட்சி பள்ளியை அடுத்த உழவர் சந்தை செல்லும் சாலையில் அப்பகுதி வியாபாரிகளாலும் பொதுமக்களாலும் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை கூலங்கள் அனைத்தையும் மாஸ் கிளீனிங் முறையில் முற்றிலுமாக அகற்றி தூய்மைப்படுத்தினர்.



தொடர்ந்து “என் குப்பை என் பொறுப்பு” என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை நகர மன்ற தலைவர், குடியிருப்பு வாசிகளுக்கும் அவ்வழியாக சென்ற பொது மக்களுக்கும் வழங்கினார்.

பின்னர், உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.



இதனால் உங்கள் பகுதியில் நோய் பரவலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பதுடன் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் நோய் பரவலை தடுக்க முடியும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன் வார்டு கவுன்சிலர்கள் சீனிவாசன், முபாரக் அலி, மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...