‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ கண்காட்சியை நேரில் கண்டு ரசித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

கோவை வ.உ.சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியினை நேரில் பார்வையிட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்தார்.



கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் பார்வையிட்டார்.



கோவை வ.உ.சி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பான, “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பார்வையிட்டார்.



இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,



“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்று இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படமும் நன்றாக உள்ளது. கட்சியில் கடைசி தொண்டனாக இருந்து ஆரம்பித்து தலைமைக்கு வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இந்த கண்காட்சி முதலில் நடைபெற்றது. தற்போது, செந்தில் பாலாஜி மூலம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது. நான் இங்கு வந்து அந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளேன் முதல்வர் அவர் கடந்து வந்த பாதை புகைப்படம் கண்காட்சியை கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்.

இதனையடுத்து அவரிடம் உங்களுக்கு பிடித்த புகைப்படம் என கேட்கப்பட்ட கேள்விக்கு, முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது எனக்கு பிடித்தது என பதிலளித்தார்.

முதல்வர் தனது இளம் வயதில் கிரிக்கெட் ஆடுவது 23 வயது 25 வயது பயண புகைப்படம் என்னுடைய தலைமுறைக்கு அது தெரியாது. முதல்வரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல ஒரு கண்காட்சி அனைவரும் வந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...