இரும்பு உருக்கு ஆலை விவகாரம்: 23 நாளாக தொடரும் போராட்டம் - 21 பேர் அடையாள உண்ணாவிரதம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக 23வது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 21 பேர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக பெண்கள், குழந்தைகள் என 21 பேர் இணைந்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசக் கோளாறு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி அனுப்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஊருக்குள் பந்தல் அமைத்து 23வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனுப்பட்டி கிராம மக்கள் இன்று குழந்தைகள், பெண்கள் உட்பட 21 பேர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தற்காலிகமாக இரும்பு உருக்கு ஆலையை மூட வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில் நிரந்தரமாக ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.



மேலும் இன்று நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் கலந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

மேலும் நீதிமன்றத்தில் ஆலையை மூட வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடர் உண்ணாவிரத போராட்டமாக மாறாமல் இருக்க ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...