வால்பாறை பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளியை ஒட்டி கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆலயம், தூய இருதய ஆலயம், பெந்தகோஷ்தே ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.


கோவை: புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை சுமந்து மலை மேல் ஏறி கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு கல்வாரி மலையில், சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நினைவு கூறும் வண்ணம் புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பாவிகளுக்காக தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை கிறிஸ்தவ மக்கள் உலகம் முழுவதும் 40 நாட்கள் நோன்பு தினமாக கடைப்பிடித்து வந்தனர்.



இன்று புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு, வால்பாறையில் உள்ள csi ஆலயம், தூய இருதய ஆலயம், பெந்தகோஷ்தே ஆலயம் போன்ற கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி இந்த நாளை அனுசரித்தனர்.



ரொட்டிக்கடை பகுதியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில், சிலுவையை தோளில் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையின்மேல் ஏறி சிலுவை சுமந்து சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மலை மீது ஏறி இயேசு கல்வாரி மலையில் சிலுவை சுமந்து சென்றதைப் போல் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து சென்று 14 இடங்களில் பிரார்தனை செய்து மலை மேல் சென்று சிலுவை வைத்து பிரார்த்தனை செய்து வந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...