வால்பாறை பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளியை ஒட்டி கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆலயம், தூய இருதய ஆலயம், பெந்தகோஷ்தே ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.


கோவை: புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை சுமந்து மலை மேல் ஏறி கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு கல்வாரி மலையில், சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நினைவு கூறும் வண்ணம் புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பாவிகளுக்காக தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை கிறிஸ்தவ மக்கள் உலகம் முழுவதும் 40 நாட்கள் நோன்பு தினமாக கடைப்பிடித்து வந்தனர்.



இன்று புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு, வால்பாறையில் உள்ள csi ஆலயம், தூய இருதய ஆலயம், பெந்தகோஷ்தே ஆலயம் போன்ற கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி இந்த நாளை அனுசரித்தனர்.



ரொட்டிக்கடை பகுதியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில், சிலுவையை தோளில் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையின்மேல் ஏறி சிலுவை சுமந்து சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மலை மீது ஏறி இயேசு கல்வாரி மலையில் சிலுவை சுமந்து சென்றதைப் போல் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து சென்று 14 இடங்களில் பிரார்தனை செய்து மலை மேல் சென்று சிலுவை வைத்து பிரார்த்தனை செய்து வந்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...