நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை - பிரதமர் வருகையையொட்டி முன்னேற்பாடு!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வரும் 9ஆம் தேதி பிரதமர் மோடி வருகிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்திக்கிறார்.


நீலகிரி: நாட்டில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக 9-ந் தேதி காலை 7:15 மணியளவில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.



அங்கு வாகன சவாரி செல்லும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக 9.35 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வருகிறார்.

அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்தித்து காட்டு யானைகளை பிடிப்பது, அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அவர்களின் குறைகளையும் கேட்கிறார்.

பின்னர், டி 23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய 3 வேட்டை தடுப்பு காவலர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபன்ட் மிஸ்பரர் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் அதில் இடம் பிடித்த ரகு மற்றும் பூமி ஆகிய யானை குட்டிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் சிறப்பாக செயல்பட்ட 12 புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்கள் மற்றும் 8 முன் களப்பணியாளர்களை பிரதமர் கௌரவிக்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடிக்கு வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக மைசூர் செல்கிறார்.



பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில், நிகழ்ச்சியை முடித்தபின் பிரதமர் மோடி மசினகுடியிலிருந்து ராணுவ ஹெலிகேப்டர் மூலம் மைசூர் செல்லவுள்ளார். இதற்கான ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை இன்று நடைபெற்றது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...