ஏப்.9ம் தேதி முதுமலை வருகிறார் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் 9ம் தேதி பிரதமர் நரேந்திர வருவதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, தெப்பக்காடு முகாமை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.



நீலகிரி: புலிகள் பாதுகாப்பு திட்டம்தொடங்கி 50-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் விதமாக வருகின்ற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் சென்று பார்வையிடுகிறார்.



அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் வருகிறார். 9-ந்தேதி காலை 9.35 மணிக்கு வரும் அவர், வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.

பின்னர் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் யானைகள் குறித்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதுடன், ரகு மற்றும் பொம்மி யானைகளையும் பார்க்கிறார்.

யானை பகன்கள் மற்றும் பழங்குடியின வனத்துறை ஊழியர்களிடம் பேசும் மோடி, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி பகுதிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் செல்ல உள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் வரவுள்ளதையொட்டி, தெப்பக்காடு பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் 9ம் தேதி வரை முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் மூடப்படும் எனவும், வனவிலங்குகளை காண்பதற்கான வாகன சவாரியும் நாளை முதல் 9ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் வருகையை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதோடு, அப்பகுதியில் டுரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 8-ந்தேதி மாலை 4 மணி முதல் 9-ந்தேதி காலை 10.30 மணி வரை தொரப்பள்ளி - கக்கநல்லா - பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை மூடபடுகிறது.



இதனிடையே தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை சீரமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...