கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி சிறுத்தை கரடி நடமாட்டம் இருந்து வருகிறது.

இதனிடையே நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்கடி உலாவரும் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் கிராம மக்கள், வெளியே செல்ல இயலாமல் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கருஞ்சிறுத்தைகள், இரண்டு சிறுத்தைகள், மூன்று கரடிகள் இதே பகுதியில் உலா வந்தன.



தற்போது சிறுத்தை நடமாடி வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...