கோவைக்கு வந்த புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

பெங்களூரில் இருந்து கோவை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கு என்று 7,579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1310 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.



மேலும் தற்போது, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெங்களூர் பெல் நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்படுகிறது.



இந்த வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி இன்று நேரில் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பொ) குணசேகரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயலெட்சுமி, மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...