உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது பாஜக சார்பில் புகார்!

உடுமலை கபூர் கான் வீதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்க பணிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தி ஆட்சியர், நகராட்சி மற்றும் எஸ்.பி அலுவலகங்களில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்க பணிக்கு தடை விதிக்க கோரி பாஜக சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர் கான் வீதியில் இந்திய கம்யூனிஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இந்த கட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையும், நகராட்சியும் இணைந்து புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நகராட்சி ஆணையரும், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளரும் நடவடிக்கை எடுக்காததால் ஏற்கனவே காலி செய்யப்பட்ட இடங்களில் மீண்டும் சட்ட விரோத கடைகள் கட்டடங்கள் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், உடனடியாக தற்பொழுது கட்டப்பட்டு வரும் கட்டடத்தை கட்ட தடை விதித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் பாஜக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தபடும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கட்டிடம் கட்டுவது சட்டவிரோதமாகும்.



எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் பாஜகவினர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



இதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், திருப்பூர் நகராட்சி மண்டல அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் ஆய்வாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...