கோவை பூச்சியூர் பண்ணாரியம்மன் கோவில் பூக்குண்ட உற்சவ விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் பகுதியில் உள்ள சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் கோவிலின் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலின் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் இராவுத்தக்கொல்லனூரில் சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பூக்குண்ட உற்சவத்தின் முதல் நிகழ்வாக கடந்த 27ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கி நேற்று சஞ்சீவி வனத்தீர்த்தம் கொண்டுவருதல், சக்தி அழைத்தல், குண்டம் திறப்பது, அக்னி குண்டத்தில் அக்னி ஏற்படுத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை சக்தி கரம் அழைத்தலை தொடர்ந்து பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து பூவோடு எடுத்தல், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.



இந்த திருவிழாவில், சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...