தொழிலுக்கு இடையூறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை.! - போசியா அமைப்பு வலியுறுத்தல்

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து பொருட்களை கோவைக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில் செய்பவர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல என்று போசியா அமைப்பு கண்டித்துள்ளது.


கோவை: நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கோவை நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.



இதில் ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், சிவசண்முககுமார், சுருளிவேல் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில், ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தொழில்துறையினர் சார்பில், மத்திய அரசிடம் எடுத்துக் கூறியும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மாநில ஜிஎஸ்டி செலுத்துவது தொடர்பாக குறு, சிறு தொழில்முனைவோர் மத்தியில் உள்ள சிறு குறைகளை கண்டறிவதும் அதற்காக பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் தொடங்கியுள்ளனர்.



இந்நடவடிக்கை தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையாக தொழில் செய்து வரும் நிலையில், அவற்றை முடக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து ஏராளமான பொருட்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில்முனைவோருக்கு நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் துறை சார்ந்த உயரதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...