கோவையில் ஆம்புலன்சில் பிரசவம் - டிரைவர், மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

கோவை சுல்தான்பேட்டையில் பிரசவத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் ஆகி அழகான குழந்தை பிறந்தது. துரிதமாக செயல்பட்டு தாய், சேய் உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.


கோவை: கோவை சுல்தான்பேட்டை வாரப்பட்டியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் சிவராஜ் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து, சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் சூலூர் ராவுத்தர் பிரிவு அருகே சென்றபோது, பிரியாவுக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே தெரியத் தொடங்கியது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி, அவசரகால ஓட்டுநர் தண்டாயுதபாணி உதவியுடன் ஆம்புலன்சில் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றினார்.

பின்னர் தாயும், குழந்தையும் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை மற்றும் தாயின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...