சூலூரில் மின்னணு கழிவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி, சூலூர் ஆர்விஎஸ் கல்லூரியில் தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. மின்னணு கழிவுகள் குறித்த துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது ஆர்.வி.எஸ். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, சூலூர் பேரூராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகள் குறித்த விழிபுணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பேரணி குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள், மக்கள் அன்றாட வாழ்வில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்த கழிவுகளை முறையாக அகற்றப்படாமல் இருப்பதால், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...