ஆவினில் வேலைவாங்கி தருவதாக மோசடி - கோவை ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

ஆவினின் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆவின் மேலாளரான சகாயம் என்பவரை ஆவின் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.


கோவை: ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நான் பேயோடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் பணியில் இருந்த காலகட்டங்களில் வேலை நிமித்தமாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு (ஆவின்) செல்வது வழக்கம்.

இதன் மூலம் அங்குள்ள அலுவலர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அதன்படி அந்த அலுவலகத்தில் இளநிலை செயலாளராக இருந்த ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், புதுக்கோட்டை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், ரூ.30 லட்சம் தந்தால் எனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார்.

அந்த சமயத்தில் ஆவின் அலுவலகத்தில் பணியாற்றும், மேலும் சிலரும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினர். அவர்களின் பேச்சை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ.30 லட்சம் வரை தந்தேன்.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று, புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் எனது மகன் பிரசாந்த் பங்கு பெற்று எழுத்துத் தேர்வு எழுதினான். வேலைக்கான உத்தரவு வந்துவிடும் என்றனர்.

கொரோனா காலகட்டமாக இருந்ததால் தாமதம் ஆவதாக கூறினர். ஆனால் வேலைக்கான உத்தரவு வரவில்லை. இதையடுத்து நான் சம்பத்தப்பட்டவர்களிடம் பணத்தை திரும்ப கேட்க தொடங்கினேன். தற்போது வரை பணம் தரவில்லை. இந்த நிலையில் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்தால் கூலிப்படையை வைத்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.

இதனால் என்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தையும் மீட்டு தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இதன் பெயரில் கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய இளநிலை செயலாளர் ஐயப்பன், கோவை மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொறியியல் பிரிவு துணை மேலாளர் சகாயம், கன்னியாகுமரி மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றிய இளநிலை செயலாளர் பழனி, நாகர்கோயில் ராமவர்மபுரத்தைச் சார்ந்த சரஸ்வதி உள்ளிட்ட நான்கு பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவின் மேலாளராக பணி பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்குப்பதியப்பட்ட நபர்களில் ஒருவரான சகாயம், கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றார். ஆவின் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...