கனிம வளங்கள் கடத்தலை தடுத்திடுக..! - கிணத்துக்கடவில் பாஜகவினர் போராட்டம்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியிலிருந்து கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்ககோரி பாஜகவினர் திடீர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும், கனிமவளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களால் சாலைகள் சேதம் அடைந்து வருவதாகவும் கூறி அப்பகுதி விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பத்தாம் நெம்பர் முத்தூர் பகுதியில் கல்குவாரிகள் குறித்து செய்தி சேகரித்து சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கல்குவாரி உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர்.

இதுச்சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் சிவப்பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இந்த நிலையில் இன்று கல்குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்ககோரி மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து சம்பவ அறிந்து சென்ற போலீசார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

பாஜகவினர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...