ஆதியோகி சிலை திறப்பு விழாவில் மோடி பங்கேற்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் கைது.

கோவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி அருகே மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையினை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதியன்று கோவைக்கு வருகை தரவுள்ளார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த சிலையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறும் 100 சதுர அடிக்கு மட்டும் உள்ளூர் பஞ்சாயத்திடம் அனுமதி பெற்றுக்கொண்டு, 4 லட்சம் சதுர அடிக்கு விதிமுறைகளை மீறி ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது சரியான முன்னுதாரனமாக இருக்காது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...