கோவையில் கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டதால் 12 டன் எடையுள்ள பஞ்சு முற்றிலும் எரிந்து சாம்பலானது .


கோவையில் ஹரியானாவிற்கு பஞ்சு ஏற்றி கிளம்பிய கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டதால் 12 டன் எடையுள்ள பஞ்சு முற்றிலும் எரிந்து நாசமானது.

கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் விக்னேஷ் டிரேடர்ஸ் என்ற பஞ்சு நிறுவனத்திற்கு சொந்தமான பஞ்சு குடோன் செயல்பட்டு வருகிறது.



குடோனில் இருந்து 12 டன்கள் பஞ்சு ஏற்றிய கண்டெய்னர் லாரி ஒன்று இன்று மதியம் 3 மணியளவில் குடோனில் இருந்து கிளம்பி அருகில் உள்ள எடை மேடைக்கு சென்ற போது லாரியின் கண்டெய்னர் பகுதியில் புகை வருவதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக எடைமேடையில் இருந்து

லாரியை வெளியேற்றிய ஓட்டுனர் அதிலிருந்து கீழிறங்கி தப்பினார். 



அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் லாரியை பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 12 டன் எடையுள்ள பஞ்சு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சு லாரியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...