மலைபோல் குவிக்கப்பட்டுள்ள டயர்களால் சுகாதாரசீர்கேடு - கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை செல்வபுரம் பை-பாஸ் சாலையில் உள்ள யோக சாஸ்தா குடியிருப்புப் பகுதியில் வாகனங்களின் டயர்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பை-பாஸ் சாலையில் யோகா சாஸ்தா குடியிருப்புப் பகுதி உள்ளது.

இதன் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் டயர்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த டயர்களை பற்றவைத்து, அவற்றிலிருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.



இந்த டயர்களை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவுவதாகவும், இதனால், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் உருவாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



அதுமட்டுமின்றி, இந்த டயர் எரிப்புகளால், அப்பகுதி முழுவதும் காற்றுமாசு ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் அப்பகுதியினர், இப்பிரச்னைக்கு கோவை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து நிர்ந்தரத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...