அதிமுக நிர்வாகிகளுக்கு வந்த தொல்லை அழைப்புகளுக்கு பின்னணியில் திமுக ஸ்டாலின் மருமகன் மீது புகார் அளிக்க இருப்பதாக அமைச்சர் வேலுமணி தகவல்



அதிமுக நிர்வாகிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பின்னால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருப்பதாகவும், கட்சி தலைமையில் இருந்து சட்டரீதியான நடவடிக்கைக்கு புகார் அளிக்க இருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை  அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்க  திட்ட அமைச்சர எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு குறுக்கு வழியில்  திமுக ஆட்சியை கொண்டு வர திமுகவினர் முயற்சி மேற்கொண்டனர் என குற்றம்சாட்டினார்.திமுகவின் முயற்சியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓற்றுமையாக இருந்து முறியடித்து இருப்பதாகவும் வேலுமணி தெரிவித்தார்.



கோவை மாவட்டத்திற்கு என ஏராளமான திட்டங்களை ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்  எனவும் மெட்ரோ ரயில், அத்திகடவு அவினாசி திட்டம்,ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,விமான நிலைய விரிவாக்கம் போன்ற  திட்டங்களை  நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அதிமுகவிற்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நான்கு ஆண்டு அதிமுக ஆட்சி தொடரவேண்டும் என்பதே அதிமுகவினரின்  விருப்பமாக இருக்கிறது எனவும்  அவர் தெரிவித்தார்.

தொகுதி மக்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் சிலர் தனக்கு போன் செய்து பேசியதாகவும் , இது போன்ற அடையாளம் தெரியாத நபரகள் பேசிய தொலைபேசி எண்கள் சைபர்கிரைம் காவல்துறையிடம்  ஓப்படைக்கப்பட்டுள்ளது எனவும் திமுகவினரே  இந்த செயல்களில் ஈடுபட்டதாகவும்  அமைச்சர் வேலுமணி குற்றம்சாட்டினார். தொலைபேசி அழைப்புகள் அதிமுகவினருக்கு வந்ததன்  பின்னணியில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருப்பதாகவும் , கட்சியின் தலைமை மூலம் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

மேலும் சென்னையில் குடிநீர் பிரச்சினை 2 மாதங்களுக்கு இருக்காது எனவும்,  அதன் பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள 300 விவசாய கிணறுகள் மூலம்  100 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும்  தெரிவித்த அமைச்சர் வேலுமணி லாரிகள் மூலம் தினமும் 3500 டிரிபபாக இருக்கும் தண்ணீர் விநியோகத்தை 6500 டிரிப்பாக உயர்த்த இருப்பதாகவும் , குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருவதாகவும் வேலுமணி தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்திலும் குடிநீர்ப்பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்த அவர், அவினாசி அத்திகடவு திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையினை நீதிமன்றம் மூலம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...