மன்காரா, லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்

மன்காரா மற்றும் லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் நாளை (பிப். 23) முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை அந்த நிலையத்திற்கான ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. கோவை- மேட்டுப்பாளையம்- கோவை சிறப்பு பயணிகள் ரயில் எண் 06152 மற்றும் 06153 ரத்து

2. ரயில் எண் 56604 சொரனூர்- கோவை பயணிகள் ரயில் ரத்து

3. ரயில் எண் 56650 கண்ணூர்- கோவை பயணிகள் ரயில், மற்றும் ரயில் எண் 56651 கோவை- கண்ணூர்பயணிகள் ரயில் சொரனூர் ரயில் நிலையம் முதல் கோவை வரை ரத்து.

4. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையம் முதல் சொரனூர் வரை ரத்து

5. ரயில் எண் 13352 ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்கள் தாமதமாக ஆழப்புலா ரயில் நிலையத்திற்கு வரும். சொரனூர் சத்திப்பில் இருந்து ஒட்டப்பாளையம் இடைப்பட்ட தூரத்தைக் கடக்க 45 நிமிடங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

6. ரயில் எண் 12678 எர்னாக்குளம்- பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மன்னனூரில் இருந்து ஒட்டப்பாளம் ரயில் நிலையத்திற்கு இடையிலான தூரத்தை 75 நிமிடங்கள் தாமதமாக கடக்கும்.

பிப்ரவரி 27ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 56650 கண்ணூர்முதல் கோவை வரும் பயணிகள் ரயில் மற்றும கோவையில் இருந்து கண்ணூர்செல்லும் பயணிகள் ரயில் ஆகிய இரு ரயில்களும் சொரனூர் ரயில் சந்திப்பில் இருந்து கோவை ரயில் சந்திப்பு வரை இயக்கப்படாது. 

2. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் பாலக்காட்டில் இருந்து திரிசூர் வரை ரத்து செய்யப்பட்டள்ளது.

3. ரயில் எண் 22637 சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...