ஆன்லைன் ரம்மி விவகாரம்: பொள்ளாச்சியில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிராகரிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொள்ளாச்சியில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் உருவப் படத்தை கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி: ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதாவை நிராகரிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொள்ளாச்சி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாக்களை தொடர்ந்து நிராகரித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.



இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் பொள்ளாச்சி மத்திய தொலைபேசி நிலைய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆளுநர் ரவியின் உருவப்படத்தை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் ஆளுநர் ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.



பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...