திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் - கோவை அரசு மருத்துவமனையில் தொடக்கம்!

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு திருநங்கைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.


கோவை: கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு அதிநவீன பாலின வழிகாட்டுதல் வழங்கும் நோக்கில் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர். பி.பி. ரமணன், "திருநங்கைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள மிகச் சிறப்பான முயற்சி. இந்த கிளினிக்கில், திருநங்கைகளுக்குத் தேவையான மனநல ஆலோசனை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பாலின மாற்று சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றார்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில், திருநங்கைகள் சங்கத் தலைவர் உட்பட 50க்கும மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் சிம்ப்ளிசிட்டியுடன் பேசிய டாக்டர்.நிர்மலா, "மூன்றாம் பாலின சமூகத்தினருக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவதற்கான ஒரு முயற்சி இது என்றார். மேலும், இங்கு தேசிய சுகாதார இயக்கம் (NHM) மற்றும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும். முதல் கட்டமாக, ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

வாரத்தின் பிற நாட்களில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த கிளினிக்கில் 5 முதல் 6 சிறப்பு மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். வரும் நாட்களில் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாலின மாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை, சரியான வழிகாட்டுதலுடன் அறுவை சிகிச்சை முறைகள் திட்டமிடப்படும்.

தேவைகளை நாங்கள் ஆராய்ந்த பிறகு அறுவை சிகிச்சை இங்கு மேற்கொள்ளப்படும், இல்லையென்றால் மாற்று வழிகள் முன்னெடுக்கப்படும். இது ஒரு நீண்ட கால செயல்பாடு என்பதால், தற்போதைக்கு வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் மையமாக இது இருக்கும், என்றார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...