அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? -தாராபுரம் தெருமுனை பிரச்சாரத்தில் சி.பி.எம் கேள்வி!

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. இப்பிரசாரத்திற்கு சிபிஎம் தாலூகா செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.

பிரச்சாரத்தின் போது நாட்டில் நிலவி வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீது தொடர் தாக்குதல், பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பிரச்சார இயக்கத்தின் போது கூட்டுக்களவாணிகளின் ஊழல் சாம்ராஜ்யம் குற்றவாளிக்கூண்டில் அதானி - மோடி பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், கண்ணுசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...