பன்றிக் காய்ச்சலுக்கு கோவையில் மேலும் இரண்டு பெண்கள் பலி

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட மர்மக்காய்ச்சல்கள் வெகுவேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால், அன்றாடம் சிலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (57) மற்றும் அதேப் பகுதியைச் சேர்ந்த வசந்தா மேரி ஆகிய இருவருக்கும் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

இதற்காக அவர்கள் அப்பகுதியிலேயே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு இரத்த பரிசோதனையில் ஈடுபட்ட அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்தனர்.

இதைத்தொடர்ந்து, பழனியம்மாளும், வசந்தாதேவியும் சிகிச்சைக்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவை அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை பழனியம்மாளும், இரவு வசந்தாமேரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பால் 35 பேரும், டெங்கு காய்ச்சலால் 7 பேரும் மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...