தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தல் - பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே அமராவதி ஆற்றின் கரையிலிருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்களை இரவு நேரங்களில் வெட்டி கடத்திச் செல்லும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் கரையிலிருந்த மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலங்கியம் அருகே அமராவதி ஆற்றின் கரையோர பகுதியின் இரு புறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளிய மரம், சவுக்கு, தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரக்கன்றுகளை வனத்துறையினர் நட்டுப் பராமரித்து வந்தனர்.



இந்நிலையில் கூடுதுறை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் செழித்து வளர்ந்திருந்த மரங்களை கடந்த 6 மாதமாக மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, அலங்கியம் அமராவதி ஆற்றுப்படுகையில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது. இதனை வனத்துறை அதிகாரிகள் தடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி கூறியதாவது, மரங்கள் வெட்டப்பட்டது உண்மை தான். யார் வெட்டி செல்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. பொதுமக்கள் தரப்பில் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் வரை இருக்கும்.

இதுகுறித்து வனத்துறையினரின் அறிக்கை பெற்ற பின்னர், தான் வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும். அவர்கள் கூறிய பிறகு தான் மரங்களை வெட்டியவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...