பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் மேன்மை தமிழ் மந்திரங்கள் ஓத சிறப்பாக நடைபெற்ற அருள்மிகு கூப்பிடு‌ பிள்ளையார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலானது, 12 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு நன்னீராட்டு பெருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் வீரமாத்தி அம்மன் திருக்கோவிலில் இருந்து புனித தீர்த்தக்குடம், மற்றும் முளைப்பாரி எடுத்து முற்கால வேள்வி வழிபாடுகள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரண்டாம் கால வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு எண் வகை மருந்து சாத்தி விமான கலசங்கள் நிறுவப்பட்டன.



இந்நிலையில், இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடும், பேரூர் ‌ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் தமிழ் மந்திரங்கள் ஓதி கருவரை விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், தொடர்ந்து மூல மூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.



காரணம்பேட்டை, கோடங்கிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...