பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் மேன்மை தமிழ் மந்திரங்கள் ஓத சிறப்பாக நடைபெற்ற அருள்மிகு கூப்பிடு‌ பிள்ளையார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலானது, 12 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு நன்னீராட்டு பெருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் வீரமாத்தி அம்மன் திருக்கோவிலில் இருந்து புனித தீர்த்தக்குடம், மற்றும் முளைப்பாரி எடுத்து முற்கால வேள்வி வழிபாடுகள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரண்டாம் கால வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு எண் வகை மருந்து சாத்தி விமான கலசங்கள் நிறுவப்பட்டன.



இந்நிலையில், இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடும், பேரூர் ‌ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் தமிழ் மந்திரங்கள் ஓதி கருவரை விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், தொடர்ந்து மூல மூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.



காரணம்பேட்டை, கோடங்கிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...