பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் எதிரொலி - கோவை நீதிமன்றத்தில் கடும் கட்டுப்பாடு!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே போலீசாரால் அனுமதிக்கப்படுகின்றனர்.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று கணவன் மனைவி விவகாரத்தில் மனைவி மீது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பைப ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவா - கவிதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

இந்நிலையில் கணவன் சிவா ஒரு லிட்டர் அளவிலான ஆசிட்டை நீதிமன்றத்திற்குள் புகுந்து மனைவி கவிதா மீது ஊற்றினார். இதில், பாதிக்கப்பட்ட கவிதா 85 சதவீதம் அளவிலான காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஆசிட் ஊற்றியவுடன் தப்பிக்க முயன்ற சிவாவை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தர்ம அடிகொடுத்து பிடித்தனர்.



இச்சம்பவத்தின் எதிரொலியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



அதே சமயம் நீதிமன்றத்திற்குள் வரும் நபர்களின் பை மற்றும் அவர்களை சோதனையிட்ட பிறகு நீதிமன்றத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.



மேலும் பொதுமக்களின் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.



ஏனைய நுழைவு வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவ்வழியாக வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கோவைவ போலீசாரின் நடவடிக்கைக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...