உடுமலையில் சரக்கு வேன் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த அன்பழகன் (40), வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் பூலாங்கிணறு பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் பலியானார்.


திருப்பூர்: பூலாங்கிணறு பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (40). விவசாயியான இவர் சொந்த வேலை காரணமாக உடுமலைக்கு வந்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.



பூலாங்கிணறு பகுதியில் வந்த போது சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேனின் மீது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...