கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை துரத்தி பிடித்த பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்.பி!

கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சிவாவை துரத்தி பிடித்த பெண் காவலர் இந்துமதியை, மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டி, ரூ.5,000 வெகுமதி வழங்கியுள்ளார்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை துரத்தி பிடித்து கைது செய்த பெண் காவலரை மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்த கவிதா என்ற பெண் மீது அவரது முதல் கணவரான சிவா ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பிச் சென்றார்.

இந்நிலையில், சிவா நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி வெளியே ஓடியபோது அங்கு வேறு வழக்கு விசாரணைக்காக வந்த ஆனைமலை பெண் காவலர் இந்துமதி, சிவாவை துரத்திச் சென்று பிடித்து கைது செய்தார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட சிவாவிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தைரியமாக குற்றவாளியை துரத்திச் சென்று பிடித்த பெண் காவலரை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டி ரூ.5,000 வெகுமதி அளித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...