யுகாதி பண்டிகை - உடுமலை ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம்

யுகாதி பண்டிகையை ஒட்டி உடுமலையில் திருப்பதி கோவிலில் ரேணுகா தேவி அம்மனுக்கு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு வழிபட்ட பக்தர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ரேணுகா தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான யுகாதி பண்டிகையையொட்டி இன்று ஸ்ரீ ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.



முன்னதாக, சக்தி புண்யகம், யுகாதி பூஜை, அலங்கார பூஜை, கன்னிகா பூஜை, மற்றும் ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை, சுமங்கலி பூஜை, மகா தீபாரதனை, ஊஞ்சல் உற்சவம் ஆசிர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது. திருக்கல்யாணம் நிகழ்வில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...