மறைந்த பலகுரல் கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்கள் அஞ்சலி!

மறைந்த மிமிக்கிரி கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு, ஈரோடு மகேஷ், திருப்பாச்சி பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன் ஆகியோர், கோவையில் நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



கோவை: மறைந்த மிமிக்கிரி கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்கள் மற்றும் சக மிமிக்கிரி கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து பல்வேறு பலகுரல் கலைஞர்களும் அக்கம்பக்கத்தினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் நகைச்சுவை நடிகர்களான ஈரோடு மகேஷ், திருப்பாச்சி பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன் ஆகியோர் நேரில் வந்து கோவை குணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், பலகுரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலானது கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...