கோத்தகிரி சோதனைச்சாவடிக்கு வந்த காட்டுயானை - உயிர் தப்பிய போலீசாரின் வைரல் வீடியோ!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு வந்த ஒற்றை காட்டு யானையிடமிருந்து இரவு பணியில் இருந்த போலீசார் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆண் காட்டு யானை ஒன்று அவ்வப்போது உலா வருகிறது. இந்த யானை சில நேரங்களில் வாகனங்களை தாக்குவது, சாலையில் வாகனங்கள் செல்ல விடாமல் வழிமறிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.



இந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று இரவு கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மாநிலநெடுஞ்சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு வந்தது.

அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அச்சமடைந்து, அங்கிருந்த தற்காலிக செட்டிற்குள் சென்று சத்தமின்றி மறைந்து கொண்டனர்.

அங்கு சென்ற காட்டு யானை சோதனை சாவடியில் பறிமுதல் செய்து வைக்கபட்டிருந்த குடி நீர் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து மிதித்து சேதப்படுத்தியதோடு, நீண்ட நேரத்திற்கு பிறகு சோதனை சாவடியை விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...