மகளிர் உதவித்தொகையை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் தான்..! - மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி பெருமிதம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்மொழிந்த மெட்ரோ, சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா மற்றும் மகளிருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆகிய திட்டங்களை தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை வரவேற்கிறோம் என மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.


கோவை: மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி தான் என அக்கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் 2023 குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி சிம்ப்ளிசிட்டியிடம் பேசியதாவது,

எங்கள் தலைவர் கமல்ஹாசன் கூறியது போல், மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது மக்கள் நீதி மய்யம் தான். பெண்கள் அதிகாரம் மற்றும் மேம்பாடு என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும் தமிழக அரசு மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண் குடும்பத் தலைவர்களுக்கு நாங்கள் 3000 ரூபாய் தருவதாக உறுதியளித்திருந்தோம். ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மெட்ரோ திட்டம், டெக் சிட்டி, காந்திபுரத்தில் உள்ள சிறை வளாகத்திற்கு பதிலாக செம்மொழி பூங்கா போன்றவை கோவைக்கு நல்ல வளர்ச்சி அடிப்படையிலான திட்டங்கள்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான சாலைகளால் மக்கள் போராடி வரும் நிலையில், கோவையில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மெட்ரோ திட்டமும் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பட்ஜெட்டில் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் நல்ல கலவையாக உள்ளது.

அதேநேரம் வருவாய் பற்றாக்குறையை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் சொல்லப்பட்ட காலக்கெடுவிற்குள் தமிழக அரசு பற்றாக்குறையை சரி செய்யும் என நம்புகிறோம். கோயம்புத்தூர் நகரத்தில் உள்ள அனைத்து கல்வித் தரத்துடன் பெரிதும் பயன்பெறும் ஒன்று என்றால் அது டெக் சிட்டி திட்டம் தான். அதுகுறித்த விவரங்களை அறிய காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...