உடுமலை நகராட்சியில் பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கப்பட்ட பேனர்கள் - பரபரப்பு!

உடுமலை அடுத்த காந்திநகர் பேருந்து நிறுத்தத்தை மறைத்து, அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் பேருந்துக்காக காத்து கிடக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் அத்தகையை பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கப்பட்ட பேனரால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

உடுமலை நகராட்சி பகுதிகளில், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பேருந்து நிறுத்தம் என அனைத்து பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கபட்டு உள்ளன.



பிரதான சாலைகளான, பழநி சாலை, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை, தளி சாலை, திருப்பூர் சாலை, ராஜேந்திரா சாலை மற்றும் தளி சாலை சந்திப்பு, பேருந்து நிறுத்தம், அனுஷம் சாலை சந்திப்பு என அனைத்து இடங்களிலும், பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.



இதற்கிடையில் உடுமலை காந்திநகர் பேருந்து நிறுத்தத்தை மறைத்து, அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் பேருந்துக்காக காத்து கிடக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஓரு சில இடங்களில் காற்றுக்கு தாங்காமல், வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்து விபத்துகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆகையால் அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதிமீறி, இவ்வாறு அமைக்கப்பட்டு வருகிறது. பிளக்ஸ் பேனர்களால், கவன சிதறல், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.



இதன் காரணமாக உடுமலை நகர பகுதிகளில், விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களைஉடனே அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை வேண்டும் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...