உடுமலை சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்

உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை கற்றுத்தந்த சிலம்ப பயிற்சியாளர் சி.வீரமணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை பயிற்சிகளை அளித்து வந்த சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

உடுமலையில் உள்ள பகத்சிங் சிலம்பம், களரி, மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானாகவும், தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளராகவும் சி.வீரமணி என்பவர் இருந்து வருகிறார்.

இவர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிலம்பம் மற்றும் களரி ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகளை இலவசமாக கற்று கொடுத்து வந்தார்.



இந்நிலையில், இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

மாணவியர்களுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசான் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு, துணைத் தலைவர் சிவக்குமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி ஐயப்பன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி, பணி நிறைவு நூலகர் கணேசன் மற்றும் நூலகர்கள் கலாவதி, மகேந்திரன், பிரமோத், அஷ்ரப், சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...