ஈஷா‌ உதவி இல்லாமல்‌ நாங்கள்‌ படித்திருக்க வாய்ப்பில்லை - சத்குருவிற்கு பழங்குடி மாணவிகள்‌ நன்றி!

பொருளாதாரத்தில்‌ மிகவும்‌ பின்‌ தங்கியுள்ள மாணவ - மாணவிகளுக்காக கோவை ஈஷா யோகா மையத்தின் அவுட் ரீச் அமைப்பின் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் விழாவில் உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவிகள் சத்குருவுக்கு நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவையில் ஈஷா அவுட் ரீச் அமைப்பின் மூலம் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவிகள் சத்குருவுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

ஈஷா அவுட்ரீச்‌ அமைப்பு சார்பில்‌ ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும்‌ நிகழ்ச்சி ஈஷாவில்‌ உள்ள சிவாங்கா குடிலில்‌ நேற்று (மார்ச்‌ 19) நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை‌ சேர்ந்த மாணவ, மாணவிகளும்‌, அவர்களின்‌ பெற்றோர்களும்‌ பங்கேற்று தங்களின்‌ அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்‌.

இந்த நிகழ்வில், நல்லார்‌ பதி பழங்குடி கிராமத்தை‌ சேர்ந்த மாணவி சஜிதா பேசியதாவது‌, நான்‌ ஒன்றாம்‌ வகுப்பில்‌ இருந்து 12-ம்‌ வகுப்பு வரை ஈஷா வித்யா பள்ளியில்‌ முழு கல்வி உதவி தொகையில்‌ படித்தேன்‌. இப்போது நான்‌ அவிநாசிலிங்கம்‌ கல்லூரியில்‌ பி.காம்‌ சி.ஏ இரண்டாம்‌ ஆண்டு படித்து வருகிறேன்‌.

ஈஷாவின்‌ கல்வி உதவி தொகையால்‌ தான்‌ பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரி படிப்பையும்‌ தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்‌. கல்வி உதவி தொகை மட்டுமின்றி டி.என்‌.பி.எஸ்‌.சி, எஸ்‌.எஸ்‌.சி போன்ற அரசு தேர்வுகளுக்கு ஈஷா மூலம்‌ எங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்‌.

ஐ.ஏ.எஸ்‌ ஆக வேண்டும்‌ என்பது என்னுடைய ஆசை. அதற்கு நான்‌ என்னை தயார்‌ செய்து வருகிறேன்‌. சத்குருவின்‌ அருளால்‌ தான்‌ இவை அனைத்தும்‌ நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, சத்குருவிற்கும்‌ ஈஷாவிற்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்‌. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல்‌, முள்ளாங்காடு பழங்குடி கிராமத்தைச்‌ சேர்ந்த நந்தினி பேசியதாவது‌, எனக்கு அப்பா, அம்மா இல்லை. பெரியம்மாவும்‌, பாட்டியும்‌ தான்‌ என்னை பார்த்து கொள்கிறார்கள்‌.

ஈஷாவின்‌ உதவியுடன்‌ கோவை பி.எஸ்‌.ஜி பள்ளியில்‌ 6-ம்‌ வகுப்பு முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை விடுதியில்‌ தங்கி படித்தேன்‌. இப்போது கோவை கலைமகள்‌ கல்லூரியில்‌ மூன்றாம்‌ ஆண்டு படித்து வருகிறேன்‌. ஈஷாவின்‌ உதவி இல்லாமல்‌ நான்‌ படித்திருக்க வாய்ப்பில்லை. ஈஷாவிற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.



இந்நிகழ்ச்சியில்‌ கோவை ஈஷா வித்யா பள்ளியின்‌ முதல்வர்‌ சாவித்ரி, கலைமகள்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ மாலா, முகவரி அறக்கட்டளையின்‌ நிர்வாகி ரமேஷ்‌, ஈஷா பிரம்மச்சாரி சுவாமி அலோகா ஆகியோர்‌ சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்‌ தொகைக்கான காசோலைகளை‌ வழங்கினர்‌.



தொண்டாமுத்தூர்‌ பகுதி கிராமத்தில்‌ வாழும்‌ மாணவர்களுக்கு கல்வி உதவித்‌ தொகை வழங்குவது மட்டுமின்றி பல்வேறு வழிகளில்‌ ஈஷா உதவி வருகிறது. கோவை சந்தேகவுண்டம் பாளையத்தில்‌ உள்ள ஈஷா வித்யா பள்ளியில்‌ பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி, உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும்‌ இலவசமாக வழங்கப்படுகிறது.



போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூர மலைவாழ்‌ கிராமங்களில்‌ இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்‌ மாணவர்களுக்கு ஈஷாவின்‌ வாகனங்கள்‌ மூலம்‌ தினமும்‌ போக்குவரத்து வசதி வழங்கப்படுகிறது. மேலும்‌, பள்ளி மாணவர்கள்‌ NMMS என்ற தேர்வு எழுதி ஆண்டுதோறும்‌ ரூ.12 ஆயிரம்‌ கல்வி உதவி தொகை பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர, கல்லூரி படிக்கும்‌ மாணவர்களுக்கு அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும்‌ நடத்தப்படுகிறது. தாணிக்கண்டி மலைவாழ்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த மாணவி பிரேம குமாரி நீட்‌ தேர்வுக்கான பயிற்சி பெறுவதற்கும்‌ உதவி வருகிறது.



மேலும்‌, அவர்களிடம்‌ கலை ஆர்வத்தை அதிகரிக்கும்‌ வகையில்‌, பரத நாட்டியம்‌ மற்றும்‌ நாட்டுப்புற நடனப்‌ பயிற்சியும்‌ வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...