தாராபுரம் அருகே கார் மோதி விபத்து - பைக்கில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சூரியநல்லூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சின்னசாமி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் நாச்சிமுத்து என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சூரியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாச்சிமுத்துகவுண்டர் மகன் சின்னசாமி (வயது 70). இவர் உப்பாறு அணையில் இருந்து சூரியநல்லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, புறவழிச் சாலையில் திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற கார் சின்னசாமியின் இருசக்கர டிவிஎஸ் எக்ஸ்எல் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் முதியவர் சின்னசாமியின் தலை சொகுசு காரின் பம்பரில் மாட்டி கொண்டது.



அதே நேரத்தில் கால்கள் முன் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் கார் வேகமாக பிரேக் அடித்ததில் தலை பம்பர் கம்பியில் பட்டு தலை அறுந்து துண்டானது. கால் முறிவு ஏற்பட்டு 100 மீட்டர் தொலைவிற்கு சின்னசாமியின் உடலை தர தரவென இழுத்துக் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் நாச்சிமுத்து என்பவரை பிடித்து குண்டடம் காவல்துறையில், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரின் தலை சாலை விபத்தில் துண்டான சம்பவம் சூரியநல்லூர் பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரியநல்லூர் பகுதியில் சிக்னல்கள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் திருப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதாகவும் அதை கட்டுப்படுத்த மேலும் சிக்னல்கள் அமைத்து வாகனத்தின் வேகத்தை குறைக்க வேகத்தடைகள் அமைத்து அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...