கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க ஆலோசனை கூட்டம்

கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் குரும்பர் இன மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



கோவை: குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற உள்ள குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலை. ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.



குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குரும்பர்‌ இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைப்பது, அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது, கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ள குரும்பர் இன மக்களுக்கு அரசியல் மற்றும் அதிகார பிரதிநிதித்துவம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

குரும்பர் இன மக்களை அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தால் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க கூடிய சூழல் உருவாகும். குரும்பர் இனத்தை சேர்ந்தவர்கள் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவதற்கான முன்னெடுப்பைச் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...