ரயில்பாதையில் கண்காணிப்பு கேமிராக்கள் - யானை இறப்பைத் தடுக்க வனத்துறை தீவிரம்!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மதுக்கரை வனத்துறையினர் மேற்கொண்டனர்.



கோவை: கோவையில் இருந்து மதுக்கரை வழியாக பாலக்காடு மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் மதுக்கரைக்கு உட்பட்ட சோளக்கரை வணப்பகுதியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

இந்த வனப்பகுதிக்குள் இருக்கும் ரயில் பாதையை கடக்கும் போது சில சமயங்களில் ரயிலில் அடிபட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்க நேரிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் இருந்த இரண்டு யானைகள் ரயில் பாதையை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தன.

இதனால் வன விலங்குகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து ரயில் பாதைக்கு வராமல் யானைகள் மற்றும் வன விலங்குகள் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்து பாதை ஏற்படுத்தி தரவும் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தவும் ரயில்வே துறை முடிவு செய்தது.



அதற்காக யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதியான சோளக்கரை பகுதியில் ரயில் பாலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பாலம் கட்டும் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையிலே சோளக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக வந்துள்ள ரயில்வே தொழில்நுட்ப துறை அதிகாரிகள், மதுக்கரை வனப்பகுதி ரேஞ்சர் சந்தியா தலைமையில் அந்த பகுதிக்கு சென்று எங்கெங்கு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று பார்வையிட்டனர்.

விரைவில் சோளக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்க உள்ளது. இந்த பணி நிறைவடையும் நிலையில் யானை உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு விபத்தை தவிர்க்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...