சாதாரண மனிதனும் தொழில் நுடபத்தை பயன்படுத்த வேண்டும்..! - அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் யூமாஜின் என்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் முதல்வர் அறிவித்தபடி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.



கோவை: சூலூர் அருகே அரசூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.



கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெற உள்ள "யூமாஜின் கருத்தரங்கம் பற்றி விளக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.



நிகழ்வில் தொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சந்தேகங்களை அமைச்சரிடம் கலந்துரையாடி கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:



சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் "யூமாஜின் என்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தபடி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும்.

சாதாரண மனிதர்களும் தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

கடந்த 2 வருடங்களில் 20 சதவீதம் ஐடி துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட நகரங்களிலும் ஐடி துறைக்கான கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். மற்ற நாடுகளில் ஐடி நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தது போல தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...