ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட தமன்னா - போலீசார் தீவிர விசாரணை

ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்டு, சங்ககிரியில் மறைந்திருந்த தமன்னாவை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். தமன்னா மீது ஆயுத சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் டிக் டாக் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்தினர். இந்த நிலையிலே டிக் டாக் வீடியோக்களை கைப்பற்றிய காவல் துறையினர் அவர்களை கைது செய்ய திட்டமிட்டனர். அதன் அடிப்படையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவுக்கிணங்க, தனிப்படை போலீசார் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட 48 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு இருந்த விக்கு மற்றும் தமன்னா மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தேடினர். சங்ககிரியில் இருந்த தமன்னாவை பிடித்த போலீஸார், கோவை அழைத்து வந்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஆயுதசட்டம் உட்பட இரு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார், அவரை பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், தமன்னா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பயங்கர ஆயுதங்களுடன் வெளியிட்ட வீடியோ குறித்து பேசி இருந்த தமன்னா, இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த வீடியோவை வெளியிட்டு இருந்ததாகவும், தற்போது திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் தற்பொழுது கர்ப்பிணியாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் தமன்னா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...