முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கு எதிரானது- மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கும் அறநெறிகளுக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி செய்தியாளர்களிடயே பேட்டியளித்தார்.

அப்போது, நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக-வின் முன்னாள், இன்னாள் பொதுச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆட்சி நடைபெறுவதாக கூறுவதே அவர்கள் ஆளத்தகுதியில்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

இவர்கள் தலைமையில் ஆட்சி நடைபெறாது என்று எடப்பாடி அறிவித்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தற்போதைய முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

கோவையில் ஆதிவாசிகளின் நிலங்கள் அபகரிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, இயற்கை வள சுரண்டல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் தலைமையில் நடைபெறும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவது ஆரோக்கியமான முன்னுதாரனம் அல்ல. 

எனவே, ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது. அவ்வாறு பிரதமர் வருவது உறுதியானால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் சார்பில் வருகிற 22 அல்லது 23ம் தேதிகளில் பிரதமரை கண்டித்து கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்.

இதே போல் நாட்டில் அச்சு ஊடக உரிமையாளர்கள் செய்தியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளால் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என குமாரசாமி  கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...