ஆர்.டி.ஓ சேவை கட்டண உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு

ஆர்.டி.ஓ சேவை கட்டணங்களை உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.



வட்டார போக்குவரத்து துறையின் பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைக்கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டணங்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறி ஆட்டோ தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் சுமார் 200 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் ஏற்கனவே பொருளாதார சுமையில் தவித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக தெரிவித்திருந்தனர். மேலும் மாவட்ட சூழலுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உடனடியாக ஆட்டோ சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனு அளிக்க சுமார் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் முன்பு குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...