ஒப்பந்தப்படி கூலி வழங்காததால், பொது வேலைநிறுத்தம் செய்யப்போவதாக விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் அறிவிப்பு!


கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு குறைத்து வழங்கப்படும் கூலியை ஒரு வார காலத்திற்குள் பெற்று தராவிட்டால் பொது வேலை நிறுத்தம் செய்யப்போவதாக விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி தெரித்துள்ளார்.



கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் 2014ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பேச்சு வார்த்தை அடிப்படையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி வழங்க வேண்டிய ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் மந்த நிலையை காரணம் காட்டி கூலியை குறைத்து வழங்குவதாகவும், இது குறித்து கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது 2011ம் ஆண்டு வழங்கிய கூலியையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பிடித்தம் செய்வதாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி குறைக்கப்பட்ட கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் பொதுக்குழு தீர்மானத்தின்படி கால வரையற்ற பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...